Friday, July 16, 2010

அனல் மேலே பனித்துளி

அனல் மேலே பனித்துளி

இந்த பாட்டு கேக்கும்பொது மனசுல தோணுகிர விஷயம் நிரய
வாழ்க்கை அழகானதுனு தோனும்...
காதலிக்கணும்னு தோனும்...
கல்யானம் பணிக்கணும்னு தோனும்...
கௌத்தம் ஹாரீஸ் இரெண்டு பேரும் பிரிந்திருக்க வேனாம்னு தோனும்...
தாமரை. வரிகளுக்கு நான் அடிமைனு புறியும்.........



அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அளாவலில்
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே
இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால்
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில்
சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)
படம்: வாரணம் ஆயிரம்.
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்.
பாடியவர்: சுதா ரகுநாதன்.
வரிகள்: தாமரை.

படம்: வாரணம் ஆயிரம்.
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்.
பாடியவர்: சுதா ரகுநாதன்.
வரிகள்: தாமரை.

No comments:

Post a Comment

I Recommend